search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.

    தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்.
    • பள்ளிக்கூடங்களை கட்டினார், இலவச மின்சாரம் வழங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால். இவரது மனைவி சுனிதா. கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில் "நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்களடைய முதல்வர் (அரவிந்த கெஜ்ரிவால்) சிங்கம். அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார். கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    நாளை மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

    • அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள்.
    • ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள்.

    பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.

    அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் அரசியலப்பை மாற்ற நினைக்கிறார்கள்.

    தேர்தலின்போது சூப்பர்மேன் போன்று மேடைகளில் அறிமுகம் ஆகிறார். ஆனால், அவர் பணவீக்கம் மேன் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த முடியும் என பா.ஜனதா தலைவர்கள் அவர் வலிமையான நபராக முன்நிறுத்த விரும்புகிறார்கள். பின்னர் ஏன் அவரால் அதேபோன்ற வறுமையை ஒழிக்க முடியவில்லை.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, இரவு 8 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    • 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

    2ம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    • 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி அசாம் 70.66%, பீகார் 53.03%, சத்தீஸ்கர் 72.13%, ஜம்மு-காஷ்மீர் 67.22%, கர்நாடகா 63.90%, கேரளா 63.97%, மத்தியபிரதேசம் 54.42%, மகாராஷ்டிரா 53.51%, மணிப்பூர் 77.06%, ராஜஸ்தான் 59.19%, திரிபுரா - 76.23%, உ.பி.யில் 52.64%, மேற்கு வங்காளம் 71.84% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 66.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    அதன்படி, இன்று நடைபெற்று வரும் 88 தொகுதிகளில் இதுவரை 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதசேம் மாநிலம் அம்ரோஹாவில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி அசாம் 60.3%, பீகார் 44.2%, சத்தீஸ்கர் 63.9%, ஜம்மு-காஷ்மீர் 57.8%, கர்நாடகா 50.9%, கேரளா 51.6%, மத்தியபிரதேசம் 46.5%, மகாராஷ்டிரா 43%, மணிப்பூர் 68.5%, ராஜஸ்தான் 50.3%, திரிபுரா - 68.9%, உ.பி.யில் 44.1%, மேற்கு வங்காளம் 60.6% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    அதன்படி, இன்று நடைபெற்று வரும் 88 தொகுதிகளில் இதுவரை 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

    • 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி அசாம் 46.31%, பீகார் 33.80%, சத்தீஸ்கர் 53.09%, ஜம்மு-காஷ்மீர் 42.88%, கர்நாடகா 38.23%, கேரளா 39.26%, மத்தியபிரதேசம் 38.96%, மகாராஷ்டிரா 31.77%, மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, திரிபுரா - 54.47%, உ.பி.யில் 35.73%, மேற்கு வங்காளம் 47.29% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த தகவல்களை மீடியா மூலம் மந்திரிகளுக்கு தெரிவித்திருந்தார் அவரது மனைவி.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 7-ந்தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநில மந்திரியுமான அதிஷி தெரிவித்துள்ளார்.

    நாளை கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். நாளை மறுதினம் மேற்கு டெல்லியில் ரோடு ஷோ நடத்துகிறார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, நியூ டெல்லி ஆகிய இடங்களில் ஆத் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சி வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, சாந்த்னி சவுக் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து அவருக்கும், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களும் இடையில் தகவல்களை பரிமாறுவதில் பாலமாக உள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக டெல்லி மக்கள் மற்றும் டெல்லி மந்திரிகளுக்கு மூன்று முறை மீடியா மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார்.

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சிகளும் செலவு செய்வது தேர்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை செய்யும். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச் சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட வேலைகளை கவனிக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

    மொத்தமாக தேர்தல் தொடர்பாக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலை மீடியா ஆய்வுகளுக்கான மையம் (The Centre for Media Studies) வெளியிட்டுள்ளது.

    லாபம் நோக்கத்தோடு செயல்படாத இந்த அமைப்பின் தலைவர் என். பாஸ்கர ராவ், இந்த தேர்தலுக்காக சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    முதலில் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டநிலையில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்படுகிறது என என். பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

    96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளருக்கான செலவு சுமார் ரூ.1,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது 2020 அமெரிக்க தேர்தலில் செலவிடப்பட்டதை விட அதிகமானது. அமெரிக்க தேர்தல் செலவுக்கு 1.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. OpenSecrets.org இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இவ்வளவு செலவு என தெரியவந்துள்ளது.

    பல்வேறு தளங்களை கொண்ட மீடியா மூலமாக பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ×